சில ஆண்டுகளுக்கு முன்னாடி ராமன் எந்த கல்லூரியில் படித்தார் என்று கேட்டு ஹிந்துக்களின் நம்பிக்கையை கிண்டல் செய்த (விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிந்த) கருணாநிதி, இன்று அதே வாயாலேயே "ஆட்சியில் இல்லாத போது தான் ராமன் தாடகைக்கு பாடம் கற்பித்தான்" என்று கூறுகிறார். கடவுள் இருக்கிறார் :)
----
விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிந்த கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் பிடிக்காமல் தான் மக்கள் அ.தி.மு.க ஆட்சியை தேர்ந்தெடுத்தனர்.
ஆனால் அது புரியாமல் ஜெயலலிதா தப்பாட்டம் ஆடி கொண்டு இருக்கிறார்.
புதிய சட்டசபை புறக்கணிப்பு, சமச்சீர் கல்வி திட்டம் மாற்றம், மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களில் அவரின் செயல்பாடு அவர் திருந்தவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது.
---
KPN பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இது போன்ற விபத்துக்களுக்கு காரணம் வழக்கம் போல் நமது அலட்சியமே.
எப்போது மாறும் நமது இந்தியா.
---
எனது முதல் கவிதை:
உன்னை விட
நிலா அழகு தான்
அமாவாசை அன்று!!!
நிலா அழகு தான்
அமாவாசை அன்று!!!
-----
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்....