Thursday, June 16, 2011

Koffee with Shan - 17/06/2001

சில ஆண்டுகளுக்கு முன்னாடி ராமன் எந்த கல்லூரியில் படித்தார் என்று கேட்டு ஹிந்துக்களின் நம்பிக்கையை கிண்டல் செய்த (விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிந்த) கருணாநிதி, இன்று அதே வாயாலேயே "ஆட்சியில் இல்லாத போது தான் ராமன் தாடகைக்கு பாடம் கற்பித்தான்" என்று கூறுகிறார். கடவுள் இருக்கிறார் :)
----
விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிந்த கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் பிடிக்காமல் தான் மக்கள் அ.தி.மு.க ஆட்சியை தேர்ந்தெடுத்தனர்.
ஆனால் அது புரியாமல் ஜெயலலிதா தப்பாட்டம் ஆடி கொண்டு இருக்கிறார்.
புதிய சட்டசபை புறக்கணிப்பு, சமச்சீர் கல்வி திட்டம் மாற்றம், மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களில் அவரின் செயல்பாடு அவர் திருந்தவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது.
---
KPN பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இது போன்ற விபத்துக்களுக்கு காரணம் வழக்கம் போல் நமது அலட்சியமே.
எப்போது மாறும் நமது இந்தியா.
---
எனது முதல் கவிதை:
உன்னை விட
நிலா அழகு தான்
அமாவாசை அன்று!!!

-----

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்....

Wednesday, March 16, 2011

நன்றி நன்றி நன்றி!!!!

என்னுடைய முதல் பதிவினை படித்து மெயில், Facebook மற்றும் தொலைபேசி வாயிலாக என்னை தொடர்புகொண்டு பாராட்டிய (திட்டிய ஹீ ஹீ ) நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.

முதல் பதிவினை எழுதி முடித்தவுடன்  .
"2G Spectrum புகழ் ராசாவின் நண்பர் சாதிக் பாஷா தற்கொலை" 
என்ற செய்தி கிடைத்தது.  
என்னுடைய பதிவிற்கும் இந்த தற்கொலைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை CBI மற்றும் உங்களுக்கும் இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன். :)

புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை

அனைவருக்கும் வணக்கம். 
என்ன எழுதுவது என்று தெரியவில்லை . இது தான் என்னோட முதல் பதிவு. 
நான் அடுத்தவர்கள் எழுதுவதை படிப்பதோடு சரி. 
இன்று துணிந்து எழுத ஆரம்பித்துவிட்டேன். முடிந்தவரை அடுத்தவர் மனம் நோகாமல் எழுத முயற்சி செய்கிறேன். இந்த எனது பதிவினை என் அம்மாவிற்கு சமர்பிக்கிறேன்.
நன்றி வணக்கம். 
அன்புடன் உங்கள் சண்முகசுந்தரம்....
மீண்டும் சந்திப்போம்.